அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் இறுதி ஆட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் 11 ஸ்டார்ஸ் ராம்நாடு அணியும், RCCC அணியும் பலப்பரீட்சை நடத்தினர். முதலில் பேட் செய்த ராம்நாடு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் சேஸ் செய்த RCCC அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற 11 ஸ்டார்ஸ் ராம்நாடு அணிக்கு முதல் பரிசும், வெற்றியை நழுவவிட்ட RCCC அணிக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் வீரர்களுக்கு பதங்கங்களும் அணிவிக்கப்பட்டன.