Monday, April 29, 2024

முஸ்லீம்களை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக ?

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தை பொறுத்த வரை இருக்கின்ற 6 இடங்களில் திமுகவுக்கு 3 இடங்களும், அதிமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தல் ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் இரண்டு இடங்களில் திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்று விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆகையால் ராஜ்யசபா இடத்திலாவது திமுக ஒரு இஸ்லாமியரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆனால் அதனை திமுக கண்டுகொள்ளவில்லை என்பது வேட்பாளர் அறிவிப்பின் மூலம் தெரிகிறது.

கடந்த லோக்சபா தேர்தலின் போது தமிழக இஸ்லாமியர்களின் வாக்குகளை அப்படியே மொத்தமாக அள்ளிய திமுக, இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பாளிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது தமிழக இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்திகொள்ள பார்க்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...