Sunday, April 28, 2024

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத் தலைவர் சுதந்திர தின வாழ்த்து செய்தி….!

Share post:

Date:

- Advertisement -

இந்திய தேசத்தின் வளங்களை சுரண்டி கொழுத்த ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து, விடுதலை காற்றை சுவாசித்த தினத்தை நாம் கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக 73 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத ஓர் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை அறியாமல், தனி மெஜாரிட்டி மூலம் NIA, UAPA,முத்தலாக், 370 ரத்து போன்ற மசோதாவை சட்டமாக்கி சர்வாதிகார போக்கை கடைபிடிப்பது போல ஆளும் மத்திய பாஜக அரசு செய்கிறது. எதிர்கட்சிகளின் குரல்கள் கேட்கப்படுவதில்லை. தேசத்தின் சுதந்திர காற்றை சாமானிய மக்கள் இன்னும் சுவாசிக்க முடியவில்லை. நவீன காலணி ஆதிக்கத்தின் கீழ் நமது தேசம் அடிமை தேசமாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.

வெள்ளையர்கள் ஆண்ட பதவிகளின் பெயர்களை மட்டும் மாற்றி வைத்து கொண்டு ஆட்சி செய்யும் இன்றைய அரசியல்வாதிகள் வெள்ளையர்களை விடவும் நம் நாட்டை சுரண்டி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சுதந்திரம் பெற போராடியவர்களை நினைவுகூர்வதுடன், அவர்கள் கனவு கண்ட “சாமானிய மக்கள் அதிகாரம் பெற்ற இந்தியா”வை படைக்க இந்நாளில் சபதம் ஏற்போம்.

#ஒன்றினைவோம்_சக்திபெறுவோம்

ரபியுல் கான்
நகரத் தலைவர்
மல்லிப்பட்டிணம் நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...