மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள CAA எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும், கொண்டுவர இருக்கின்ற NPR மற்றும் NRC சட்டங்களுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் நடைபெற்றது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA, மே 17 இயக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் கண்டன பேருரை ஆற்றினர்.
இக்கண்டன பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.