Thursday, March 19, 2026

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமுமுகவின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் SMI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SMI மாவட்ட செயலாளர் முகமது இம்ரான் தலைமையேற்றார், SMI பொறுப்பாளர் இம்தியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் துவக்கவுரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் சேக் அஜ்மல், மமக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் சிற்றுரை நிகழ்த்தினர். சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணை செயலாளர் குர்சித் அகமது கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காவல்துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக சகோதரர் முஸ்தபா நன்றியுரை நிகழ்த்தினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img