Saturday, May 18, 2024

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மதுக்கூரில் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமுமுகவின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் SMI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SMI மாவட்ட செயலாளர் முகமது இம்ரான் தலைமையேற்றார், SMI பொறுப்பாளர் இம்தியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் துவக்கவுரை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் சேக் அஜ்மல், மமக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் சிற்றுரை நிகழ்த்தினர். சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணை செயலாளர் குர்சித் அகமது கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் டெல்லி காவல்துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக சகோதரர் முஸ்தபா நன்றியுரை நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...