மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் MLA, தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகின்றனர். பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் CAA, NPR, NRC சட்டங்களுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் என கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் அழைப்பு கொடுத்துள்ளனர்.