Friday, May 3, 2024

மே.வங்கத்தில் குடியேறிய அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்களே- மமதா பானர்ஜி அதிரடி !

Share post:

Date:

- Advertisement -

மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறி வசிக்கும் அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பேரணியில் பங்கேற்றார்.

அமித்ஷாவின் வருகைக்கு எதிராக கொல்கத்தாவில் இடதுசாரிகள், அமித்ஷாவே திரும்பிப் போ என்று முழக்கம் எழுப்பி போராட்டங்களை நடத்தினர். அத்துடன் அமித்ஷா வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர்.

இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையே கொல்கத்தா பேரணியில் பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்ட திருத்தத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என கூறியிருந்தார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் காலியாகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:

வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் அனைவருமே இந்திய நாட்டின் குடிமக்களே. அவர்களுக்கு இந்திய குடியுரிமை இருக்கிறது. புதியதாக குடியுரிமை கோரி நீங்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

நீங்கள் இந்த நாட்டின் தேர்தல்களில் வாக்களிக்கலாம்.. இந்த தேசத்தின் பிரதமர், முதல்வரை தேர்ந்தெடுக்கலாம். சிலர் நீங்கள் இந்த தேசத்தின் குடிமக்கள் இல்லை என்று கூறுவார்கள்.. அவற்றையெல்லாம் நம்ப வேண்டாம்.

குடியுரிமை விவகாரத்தில் ஒருவரைக் கூட மேற்கு வங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேற்றமாட்டோம் என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறோம். டெல்லி வன்முறைகளை தடுக்க மோடி அரசு தவறிவிட்டது.

மேற்கு வங்கத்தை ஒருபோதும் இன்னொரு டெல்லியாக மாற்ற அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...