தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
அனைத்து தெரு மக்கள் பங்கேற்ற இப்பேரணி, அதிரை சேர்மன்வாடியில் இருந்து புறப்பட்டு, பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஜாவியா ரோட்டில் நடைபெறும் ஷாஹீன் பாக் தொடர் போராட்ட களத்தை அடைந்தது.
இப்பேரணியில் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று குடிகெடுக்கும் சட்டங்களுக்கு எதிராகவும், அதனை கொண்டு வந்து ஆதரத்த பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் செல்போனில் டார்ச் லைட் எரியவிட்டபடியும் தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர்.
சுமார் பத்தாயிரம் பங்கேற்ற இப்பேரணி எவ்வித சலசலப்புமின்றி, அமைதியான முறையில் கட்டுப்பாட்டோடு நிறைவுபெற்றது.