Saturday, September 13, 2025

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இத்தாலியில் இருந்து துபாய் வழியாக 3 வயது குழந்தை கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. அக்குழந்தைக்கு அங்கு நடத்தப்பட்ட  சோதனையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை மருத்துவ குழுவினர் உறுதிசெய்துள்ளனர். குழந்தையின் தாயும்,  தந்தையும் எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனினும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படாது எனவும், வழக்கல் போல நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img