Friday, May 3, 2024

அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளின் ஜுமுஆ தொழுகை நேரம் மாற்றம் !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜுமுஆ தொழுகைகளை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ் மாநில உலமா சபை கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் அதிரையில் இன்று(20/03/2020) நடைபெற உள்ள ஜுமுஆ நேரங்களை மாற்றியமைத்து அந்தந்த ஜுமுஆ பள்ளி நிர்வாக கமிட்டியினர் அறிவிப்பு செய்துள்ளனர். அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளின் மாற்றியமைக்கப்பட்ட நேரம் பின்வருமாறு :

ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளி :

ஜும்மா சொற்பொழிவு சரியாக பகல் 1 மணிக்கு தொடங்கி, 1.10 மணிக்கு குத்பாவும், 1.15 மணிக்கு ஜும்மா தொழுகையும் நடைபெறும். எனவே தொழுகையாளிகள் அனைவரும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருமாறு ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி :

பகல் 12.40 மணி முதல் 12.55 மணி வரை பயானும், 12.55 மணிக்கு குத்பாவும், 1.05 மணிக்கு ஜும்மா தொழுகையும் நடைபெறும். மேலும் தொழுகையாளிகள் அனைவரும் அவரவர் இல்லங்களில் ஒழு செய்துவிட்டு, குறித்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு வருமாறு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகக் கமிட்டி சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி :

குத்பா உரை பகல் 1 மணிக்கு தொடங்கி, ஜும்மா தொழுகை 1.20 க்குள் நிறைவடையும். பயான் நடைபெறாது.

எனவே, தொழுகையாளிகள் அவரவர் இல்லங்களில் ஒழு செய்துவிட்டு குறித்த நேரத்தில் முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளிக்கு வருமாறும், முன் பின் சுன்னத் தொழுகைகளை தங்களது வீடுகளில் தொழுது கொள்ளுமாறும் புதுமனைத்தெரு முஹ்யித்தீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெரிய ஜுமுஆ பள்ளி :

பகல் 12.40 மணி முதல் 12.50 மணி வரை பயானும், 12.50 மணிக்கு குத்பாவும், 1.00 – 1.10 மணிக்குள் ஜுமுஆ தொழுகை நடைபெறும் எனவும், தொழுகையாளிகள் அனைவரும் அவரவர் இல்லங்களிலேயே ஒழு செய்துவிட்டு குறித்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு வருமாறு பெரிய ஜுமுஆ பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

A.J. ஜுமுஆ பள்ளி :

பகல் 12.40 மணி முதல் 12.55 மணி வரை பயானும், 12.55 மணிக்கு குத்பாவும், 1.05 மணிக்கு ஜுமுஆ தொழுகையும், தொழுகையின்போது ‘குனூத்’ ம் ஓதப்படும்.

எனவே தொழுகையாளிகள் அனைவரும் குறித்த நேரத்தில் பள்ளிவாசலுக்கு வருமாறு A.J. ஜுமுஆ பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...