கையில் அணிந்திருக்கும் மோதிரம் முதல் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் வரை எதுக்குமே இங்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லை.
அதிரையில் சமீபகாலமாக திருடர்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை ஒருவித தயக்கத்துடனே சாலைகளில் நடந்து செல்லும் காட்சியை காண முடியும். குறிப்பாக பெண்களின் நிலை பரிதாபம்.
காவல் துறையில் நிலவிவரும் ஆட்கள் பற்றாகுறை விரிவான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பெரும்சவாலாக இருக்கிறது என விளக்கம் அளிக்கிறார் அந்த அதிகாரி.
விளக்கம் என்ற பேரில் காவல்துறை தன்மீதான பொறுப்பை தட்டிக்களிக்க கூடாது என சுட்டிக் காட்டும் சமூக ஆர்வலர்கள், ஊருக்குள் சுற்றித்திரியும் களவாணிகளை பொறிவைத்து பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதிரை சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படுமா? பொருத்திருந்து பார்ப்போம் பொறியில் சிக்கப்போவது யாரென.