Wednesday, December 3, 2025

இளைஞர்களை கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனை வழங்கிய காவல்துறை…!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒரு மணிக்கு மேல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களைப் பிடித்துக் கும்மி அடிக்க வைத்து நூதன தண்டனையைக் கோவை காவல்துறை வழங்கியது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3வது முறையாக நாடு முழுதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாரத்தில் 7 நாட்கள் 7 வண்ணங்கள் வாகனங்களில் பூசப்பட்டு , மீண்டும் சாலைகளில் திரிவதைக் கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கோவை, சூலூர் காவல்துறையினர் நேரக்கட்டுப்பாடான மதியம் 1 மணியைக் கடந்து சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களைப் பிடித்து, கும்மியடிக்க வைத்துள்ளனர். கும்மியடிக்கும் போது, விழித்திரு, விலகி இரு எனச் சொல்ல வைத்து, நூதன தண்டனையை காவல்துறையினர் வழங்கியுள்ளனர். 

இதனிடையே கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரைக் கடந்த மார்ச் 25 முதல் நேற்று வரை 15,598 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17,646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 15,165 பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 35 லட்சத்து 88 ஆயிரத்து 700 அபராதம் பெறப்பட்டு உள்ளது. 

நன்றி: புதிய தலைமுறை

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img