Monday, February 2, 2026

மல்லிப்பட்டிணம் அருகே பயங்கர தீ விபத்து

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் ஐந்து குடிசை வீடுகள் எரிந்து நாசம்.

அந்த பகுதியில் வசிப்பவர்கள் தினக்கூலி வேலைக்கு வழக்கம்போல் சென்றிருந்தனர்.குடியிருப்புகளில் யாரும் இல்லை.இந்நிலையில் இன்று(ஜூன்.4) மதியம் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக குடிசை ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீயானது பக்கத்தில் உள்ள குடிசைகளிலும் பரவத்தொடங்கியது. புகை மண்டலத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீ மேலும் பரவா வண்ணம் தடுக்க தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

மேலும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகன உதவியுடன் தீ பரவாமல் தீயை தீயணைப்பு அதிகாரிகள் அணைத்தனர்.இந்த தீவிபத்தில் ஐவரின் வீட்டிலிருந்த அரிசி,மளிகை பொருட்கள்,ஆடைகள்,நெல் மூட்டைகள் என அனைத்தும் எரிந்து நாசமாயின.சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை எப்படி தீ விபத்து நேர்ந்தது என விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img