நமதூரில் கடந்த சில மாதங்களாகவே மிக அதிகமான மரணச் செய்திகள் நாளொன்றுக்கு 5 வீத மரணச் செய்திகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதிரையர்களை தினமும் காலையில் மொபைல் அலாரங்கள் எழுப்புகின்றனவோ இல்லையோ நாம் நெருங்கி பழகிய நண்பர்கள், குடும்பத்தார்கள், அண்டைவீட்டார்களின் மரணச் செய்திகள் திடுக்கிட்டு எழச்செய்கிறது.
கைபேசியை எடுத்தாலே ஏதாவது ஓர் மரணச் செய்தியை கடக்காமல் நம்மால் வெளிவர முடிவதில்லை. ஊரில் உள்ள மரணச் செய்திகள் மிக வேகமாக அனைத்து வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் உலாவிக் கொண்டிருக்கிறது.
இச்சூழலில் மேற்கொண்டு அதே மரணச் செய்திகளை நமது “அதிரை எக்ஸ்பிரஸ்” ஊடகத்தில் பதிந்து மேலும் அதிரையர்களை மன உளைச்சல்களுக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அதிரை எக்ஸ்பிரஸ் முடிவு செய்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலசூழல் மாறும் வரையில் மரணச் செய்திகளை அதிரை எக்ஸ்பிரஸ் பதிவேற்றம் செய்யாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தையோ அல்லது நிருபர்களையோ மரணச் செய்திகள் தொடர்பான விஷயங்களுக்கு அதிரையர்கள் தொர்பு கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து மரணச் செய்திகளால் அதிரையர்களுக்கு ஏற்படும் மன அசௌகரியங்களை அறிந்து இந்த முடிவை அதிரை எக்ஸ்பிரஸ் அறிவிக்கிறது.
-S.அப்துல் வஹாப்,
பொறுப்பாசிரியர் (அதிரை எக்ஸ்பிரஸ்)