அதிரை கடற்கரைத்தெரு பீச் அப்டேட் வாட்ஸ் அப் குழுமத்தின் சார்பில் ஆன்லைன் மார்க்க அறிவுபோட்டிகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் சிறுவர், சிறுமியர் பலர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இந்த மார்க்க அறிவுபோட்டியின் பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு பெண்கள் மதரசாவில் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தார்கள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், முஹல்லாவாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.