Thursday, May 16, 2024

விமானத்தில் சிகரட்,சிறைப்பிடித்த சிப்பந்திகள்!

Share post:

Date:

- Advertisement -

சென்னையிலிருந்து, பீஹார் மாநிலம், பாட்னாவிற்கு, நேற்று பகல், 12:20 மணிக்கு, விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, பிரவீன் குமார் ஷர்மா, 40 என்பவர், விமானத்தில் ஏறி, அவருக்கான இருக்கையில் அமர்ந்தவுடன், சிகரெட் எடுத்து, பற்ற வைத்தார். இதைக்கண்ட விமான ஊழியர்கள், ‘விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், விமானம் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது’ என்றனர். பிரவீன் குமார், எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து சிகரெட் பிடித்தார். இதுகுறித்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து, பிரவீன் குமாரை விமானத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அவரை மேல் விசாரணைக்காக, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...