Saturday, September 13, 2025

விமானத்தில் சிகரட்,சிறைப்பிடித்த சிப்பந்திகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையிலிருந்து, பீஹார் மாநிலம், பாட்னாவிற்கு, நேற்று பகல், 12:20 மணிக்கு, விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, பிரவீன் குமார் ஷர்மா, 40 என்பவர், விமானத்தில் ஏறி, அவருக்கான இருக்கையில் அமர்ந்தவுடன், சிகரெட் எடுத்து, பற்ற வைத்தார். இதைக்கண்ட விமான ஊழியர்கள், ‘விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், விமானம் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது’ என்றனர். பிரவீன் குமார், எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து சிகரெட் பிடித்தார். இதுகுறித்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து, பிரவீன் குமாரை விமானத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அவரை மேல் விசாரணைக்காக, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img