Sunday, September 14, 2025

கொரோனா: டெல்லியில் மீண்டும் ஊரடங்கு?

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்லியில் மீண்டும் கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே டெல்லியில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து கட்டுப்படுத்த அரசு திணறி வந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை சீரான நிலையில் தற்போது மீண்டும் நோய் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு மினி ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. 

இதனால் மக்கள் கலக்கம் அடைந்தனர். ஆனால் ஊரடறங்கு எதுவும் பிறப்பிக்கப்போவதில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கிறது என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img