Tuesday, May 7, 2024

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் பட்டுக்கோட்டை நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். மேலும் இதில் பட்டுக்கோட்டை கிளை தலைவர் பாரூக், செயலாளர் பதுருதீன், பொருளாளர் அலாவுதீன், துணை தலைவர் சாகுல், துணை செயலாளர் கான்சாகிப், மாணவரணி உமர், தொண்டரணி ஜுபைர், வர்த்தகரணி ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமினை பட்டுக்கோட்டை கிளை மருத்துவரணி சித்திக் ஏற்பாடு செய்திருந்தார். இம்முகாமில் தமிழி கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அருண்ராஜ், துணைத்தலைவர் சேக்தாவூத் மற்றும் அதன் உறுப்பினர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர். இதன்மூலம் தானமாக பெறப்பட்ட 50 யூனிட் ரத்தம், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்(TMCH) முதல்வர் Dr.M. ஜெயந்தி மற்றும் இரத்த வங்கி அலுவலர் கண்ணன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...