Friday, May 3, 2024

அதிரையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் – காவல்துறை எச்சரிக்கை!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழகத்திலும் கொரோனா தொற்றால் தினமும் 4000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். இதனால் தமிழக சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்து கடைப்பிடிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுபவர்கள் மீது அதிகப்படியான அபராதம் விதிக்க மாநில சுகாதாரத்துறை மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தியது.

அதன் எதிரொலியாக இன்று முதல் மாநிலம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும், முகக்கவசம், தனிநபர் இடைவெளி இல்லாத போக்குவரத்துகள், ஷாப்பிங் மால்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது உச்சபட்ச தண்டனை பாயும் என காவல் துறை எச்சரித்து உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...