கட்டுமான பொருட்களின் முறையற்ற விலை உயர்வால் அதிரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அதிரை ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் “சமீபகாலமாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.100/-க்கு மேலும், கம்பி டன்னுக்கு ரூ.20,000/-யை தாண்டியும் கட்டுக்கடங்காமல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சொந்த வீடு கனவில் இருக்கும் சாமானிய மக்களின் கனவு நிறைவேறாமல் போகும் சூழல் உருவாகும். எனவே கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் விலை நிர்ணயம் செய்ய ஏதுவாக கட்டுமான பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழக அரசு அமைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துக! முதலமைச்சர் தனிப்பிரிவில் அதிரை ஆமினா’ஸ் மனு!!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





