Saturday, September 13, 2025

விடுதலை எப்போது? விடியலின் தலைவரை சந்தித்த சமுதாய தலைவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சிறைகளில் உள்ள 700 கைதிகளை அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலைக்கு வழிவகை செய்யும் அரசாணையை சமீபத்தில் அரசு வெளியிட்டது.

அதில் இஸ்லாமிய சிறைவாசிகளும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தகர்த்து உள்ளதாக இஸ்லாமிய தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் அரசு பாரபட்சம் கூட்டுகிறது என நெட்டிசன்கள் எழுதி வருகிறார்கள்.

இதனால் திமுக அரசுக்கு ஆதரவு அளித்த இஸ்லாமிய கட்சிகளுக்கு நெருக்கடி நீடித்தது.

இதனால் களத்தில் இறங்கிய அனைத்து இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஒன்று கூடி முதல்வரை சந்திப்பது என்ற முடிவின் அடிப்படையில், முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

சுமார் 15 நிமிடம் வரை நீடித்த இச்சந்திப்பின் போது இஸ்லாமிய சமூகத்தின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்து உள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நலன் காக்கும் இந்த அரசில் இஸ்லாமியர்களுக்கு விடுதலை இல்லையெனில் எப்போதும் இல்லை என்ற மன நிலையில் சிறுபான்மை இஸ்லாமிய சமூகம் மிகவும் எதிர்பார்ப்பதாக சந்திப்பின் போது எடுத்துரைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img