Sunday, May 5, 2024

Big Breaking: தேங்கும் குப்பைகள்! அதிரை நகராட்சி மன்றத்தை உடனே கூட்ட வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி பகுதிகளில் அகற்றப்படும் குப்பைகள் அனைத்து வண்டிப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக கையாளாத காரணத்தால் குப்பை கிடங்கு நிறைந்து  மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. குப்பைகள் தீயில் எரிவதால் ஏற்பட கூடிய நச்சுக்காற்றை அப்பகுதிவாசிகள் சுவாசிக்க கூடிய அவலமும் தொடர்கிறது. மேலும் அதிரை நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையோரமாகவும் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க நகராட்சி மன்ற கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என SDPI 13வது வார்டு உறுப்பினர் பெனாசிரா அஜாருதீன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தை நகராட்சி அலுவலரிடம் SDPI மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூத் தலைமையிலான நிர்வாகிகள் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...