தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் கோல்டன் ரெசார்ட் ஹோட்டலில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் தஇரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய மீனவர் பேரவை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுசெயலாளர் தாஜுதீன். நேக்ஸ் பெர்னாண்டோ, துணை தலைவர் கௌரிலிங்கம்,ஆலோசகர்கள் கோசல்ராம்,லீமா றோஸ்.மகளிர் அணி மாநில தலைவி ஜெயந்தி சித்தார்த்தன்.கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பேரவை தலைவர் டாக்டர் ஜோர்தான். தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் வடுகநாதன் கடலூர் மாவட்ட தலைவர் சுப்புராயன் ராமநாதபுரம் மாவட்ட வடக்கு தலைவர் வேலாயுதம் மற்றும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் நாகப்பட்டினம் புதுக்கோட்டை ராமநாதபுரம் தெற்கு திருநெல்வேலி மாவட்ட தலைவர்கள் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேரவை க்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பதாக பேரவையின் மறைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு மௌன அஞ்சலிசெலுத்தப்படடது. சென்ற ஆண்டு மறைந்த பேரவையின் முன்னாள் பொருளாளர் ஆளிக்குப்பம் பஞ்சாமிர்தம் அவர்கள் உருவப்படத்தை திறந்து நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.