கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட உள்ளன.
இந்நிலையில், அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தோரை பாராட்டி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணை தலைவரும் தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவருமான எம்.அப்துல் ரஹ்மான் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
இதனை முஸ்லீம் லீக் அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப், மாவட்ட ஊடகவியாளர் மணிச்சுடர் சாகுல் ஹமீது, ஜெய்லானி, 7வது வார்டு கவுன்சிலரின் கணவர் முபீன் ஆகியோர் அதிரை எக்ஸ்பிரஸ் முன்னாள் பொறுப்பாசிரியரும் நிருபருமான அப்துல் வஹாப்பிடம் ஒப்படைத்தனர். இந்த பாராட்டு கடிதங்கள் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.