Wednesday, May 1, 2024

அதிரையை ஆட்டிபடைக்கும் டெங்கு – ஆபத்தான நிலையில் ஒருவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

காலை வேளைகளில் மட்டும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி செய்வதால் மற்ற நேறங்களில் வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே மருத்துவம் பார்க்கும் அபாய நிலை உள்ளது.

இந்த நிலையை போக்க அரசு மருத்துவமனையை 24மணி நேர மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும் .

இதனை தவிர்க்க ஏழை மக்களும் தனியார் மருத்துவ மனைகளை நாடி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அபாயகரமான மர்ம காயச்சலினால் பிடிக்கப்பட்ட மக்கள் பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு மருத்துவர்களை அனுகி வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் அமையப் பெற்று பல மாதங்கள் ஆகியும் சொல்லி கொள்ளும் அளவிற்கு சுகாதார மேம்பாடுகள் செயல்படுத்த வில்லை.

ஆங்காங்கே சிறு பாலங்கள் உள்ளிட்ட வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெறுவதும், இதனால் தடுக்கப்பட்ட கழிவு நீர்களால் தற்போது டெங்கு உள்ளிட்ட அபாயகரமான நோய்கள் பரவுவதாக கூறுகின்றனர்.

பாலங்கள் வடிகால்கள் அவசியம்தான் என்றாலும்,மக்களின் சுகாதாரம் அதைவிட அவசியம் என்பதை மனதில் கொண்டு நகரில் நிலவும் கொசுத் தொல்லையை ஒழித்தால் ஓரளவுக்கு நோய்கள் இன்றி வாழ முடியும்.

ஆதலால் நகர தலைவர்,மற்றும் துணைத்தலைவர் அதிரை நகரில் நிலவும் கொசு தொல்லையை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...