தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் துரைமுருகனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் உள் நோயாளியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிகிச்சை முடிந்து அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை அல்லது இரவு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.