Saturday, May 4, 2024

அதிரையில் ரகசியமாக வைக்கப்படும் தீர்மானங்கள்! நகர்மன்றத்தில் என்ன நடக்கிறது?

Share post:

Date:

- Advertisement -

27 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை நகராட்சியின் புதிய நகர்மன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைந்தது. இந்நிலையில், தற்போது நகர்மன்ற கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதனை வெகுஜன மக்களின் பார்வைக்கு தெரிவிப்பது இல்லை ? மக்களின் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக நகர்மன்ற கூட்ட தீர்மானங்களை https://www.tnurbantree.tn.gov.in/adirampattinam/council-resolution-2/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முறையாக அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அதிரை நகர் மன்ற தீர்மானங்களில் சிலவற்றை அதில் காண கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கூட்ட தீர்மானங்கள் மட்டுமே இந்த அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் நகர்மன்ற கூட்டங்கள் நடைபெற்றதா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகிறது. அவ்வாறு கூட்டங்கள் நடைபெற்று இருக்கும் பட்சத்தில் மூன்று மாதங்களாக தீர்மான விபரங்கள் ஏன் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நகராட்சி எல்லையில் நடைபெற கூடிய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் நகர்மன்ற கூட்ட தீர்மானங்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...