மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகனும், முஹம்மது பாசித் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹக், அபுதாஹிர், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய நா.மு. நத்தர்ஷா அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.