Monday, September 29, 2025

பிலால் நகருக்கு பிறக்குமா விடியல்?

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய கோரி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் 1வது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் ஜாஸ்மின் கமாலுதீன் ஆகியோர் மின்சார வாரியத்திற்கு கடந்த ஆண்டு மனு அளித்தனர்,

பல மாதங்கள் உருண்டோடிய நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணாத மின் வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிகிழமை போராட்டத்தில் ஈடுபடபோவதாக சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து வியாழக்கிழமை பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர், அதிரை காவல் ஆய்வாளர், சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கமாலுதீன், கனி, சதாம், இமாமுதீன் ஆகியோரை பங்கேற்றனர்.

இதில் பேசிய உதவி மின் செயற்பொறியாளர், ஒரு வார காலத்திற்குள் மின் கம்பத்தை மாற்றுவதுடன் 3 மாதங்களில் புதிய மின் மாற்றி அமைத்து பிலால் நகரில் தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img