ஏரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் அடிக்கடி ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய கோரி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் 1வது வார்டு ஊராட்சிமன்ற உறுப்பினர் ஜாஸ்மின் கமாலுதீன் ஆகியோர் மின்சார வாரியத்திற்கு கடந்த ஆண்டு மனு அளித்தனர்,
பல மாதங்கள் உருண்டோடிய நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணாத மின் வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிகிழமை போராட்டத்தில் ஈடுபடபோவதாக சமூக ஆர்வலர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து வியாழக்கிழமை பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர், அதிரை காவல் ஆய்வாளர், சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கமாலுதீன், கனி, சதாம், இமாமுதீன் ஆகியோரை பங்கேற்றனர்.
இதில் பேசிய உதவி மின் செயற்பொறியாளர், ஒரு வார காலத்திற்குள் மின் கம்பத்தை மாற்றுவதுடன் 3 மாதங்களில் புதிய மின் மாற்றி அமைத்து பிலால் நகரில் தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.