Sunday, February 1, 2026

அதிரையில் மகா கும்பாபிஷேகம்! பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கிய திமுகவினர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் அருள்மிகு ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் சார்பில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை பறைச்சாற்றும் விதமாக மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரையின் அறிவுறுத்தலினின்படி கோவில் விழாவில் பங்கேற்றவர்களுக்கு ரோஸ்மில்க் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளரும் முன்னாள் அதிரை சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் செய்திருந்தார். இதனையடுத்து அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருபா, திருப்பதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்ற 600க்கும் மேற்பட்டோருக்கு ரோஸ்மில்க் வழங்கினர். இதனிடையே ஆறுமுககிட்டங்கி தெரு கிராம பஞ்சாயத்து சார்பில் எஸ்.எச்.அஸ்லமிற்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img