Sunday, September 14, 2025

அதிரையில் சிறுவர்களை வேட்டையாடும் வெறிநாய்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் அக்னி வெயில் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் படுமோசமாக இருக்கிறது. வறட்சியான காற்றுடன் அனல் பறக்கும் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனிடையே அடிக்கடி ஆடு, மாடுகளை கடித்து பதம்பார்த்து வந்த வெறிநாய்கள் தற்போது தெருக்களில் நடமாடும் சிறுவர்களை கடித்து குதற ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக சி.எம்.பி லைனில் 7 வயது சிறுவனை வெறிப்பிடித்த நாய் ஒன்று கடித்து குதறியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிரை நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சொத்துவரி வசூலிக்க மும்முரம் காட்டும் நகராட்சி நிர்வாகம், அதே தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க துளியளவும் அக்கறை காட்டாதது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img