Sunday, February 1, 2026

திமுகவில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்! களத்தில் இறங்கிய தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

இரண்டு மாதத்திற்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டிய மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்பது குறித்தும் பேசினார். மேலும் எதிர்வரும் மக்களவை தேர்தல் பணி தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஜமாலுதீன், பால்சாமி, இஸ்காக், யூசுப், சேக்தாவூத், அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிரை திமுகவினர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img