அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9.30மணிக்கு நடைபெற கூடிய இந்த முகாமில் பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் முனைவர். கா.தர்மேந்திரா, தலைமை ஆசிரியர் முனைவர். எஃப்.சாகுல் ஹமீது, தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பிரிவு நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அலுவலர் எம்.சசிகுமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். இந்த கல்வி வழிகாட்டுதல் முகாமை மாணவர்களும் பெற்றோர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு பயனடைய வேண்டும் என சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அதிரை பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்!!
More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...
அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!
அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை.
அதிராம்பட்டினம், ஜன. 7:...





