அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9.30மணிக்கு நடைபெற கூடிய இந்த முகாமில் பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் முனைவர். கா.தர்மேந்திரா, தலைமை ஆசிரியர் முனைவர். எஃப்.சாகுல் ஹமீது, தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பிரிவு நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அலுவலர் எம்.சசிகுமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். இந்த கல்வி வழிகாட்டுதல் முகாமை மாணவர்களும் பெற்றோர்களும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு பயனடைய வேண்டும் என சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அதிரை பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்!!
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...