பல்வேறு பொருளாதார சிக்கலில் இருந்த இலங்கை அரசு தற்போது மெல்ல மெல்ல தலைத்தூக்கி வருகிறது. முன்னதாக அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை குறைத்து உத்தரவிட்டது இதனால் அரிசி ரவை கோதுமை எண்ணை உள்ளிட்டவற்றின் விலைகள் வெகுவாக குறைந்தன.
அதன் வரிசையில் தற்போது மின்சார கட்டணத்தை 14.2 வீதம் குறைஒத்திருக்கிறது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 யூனிட்கள் வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு யூனிட்டிற்கு 30 ரூபாய் என வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பிரிவிற்கு வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
60 யூனிட்டுகளுக்கு குறைவான யூனிட்டுகளுக்கு கட்டணம் 42 ரூபாயிலிருந்து 32 ரூபாவாகவும், 650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கட்டணம் 300 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
91 முதல் 120 யூனிட்களுக்கு இடைப்பட்ட பிரிவுக்கு யூனிட் கட்டணம், 42 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், மாதாந்திர நிலையான கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை மக்கள்.மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
இலங்கை செய்தியாளர் – அபூசயீத் . சிலாவத்துறை.