Wednesday, May 15, 2024

அதிரை SSMG கால்பந்து தொடர் : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ESC அதிரை!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் இன்று(18/07/2023) நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாலு மெமோரியல் திருச்சி அணியினரும் ESC அதிராம்பட்டினம் அணியினரும் மோதினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல் அடித்த பாலு மெமோரியல் திருச்சி அணி, வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆரம்பித்ததும், சுதாரித்துக்கொண்ட ESC அதிராம்பட்டினம் அணி முதல் கோலை அடித்தது. பின்னர் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்த ESC அதிராம்பட்டினம் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் பாலு மெமோரியல் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நாளையதினம்(19/07/2023) விளையாட வேண்டிய அணிகள் :

இரண்டாம் அரையிறுதி ஆட்டம் :

ராயல் FC அதிராம்பட்டினம் vs கலைவாணர் 7s கண்டனூர்

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...