Monday, May 20, 2024

கம்பிகளை அறுத்து போட்ட அதிரை மின்வாரியம்! கெரண்ட் இல்லாமல் பரிதவிக்கும் அப்பாவிகள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணத்திற்காக இன்று காலை மின் தடை ஏற்படுத்தப்பட்டது. காலை 9மணி முதல் 5மணி வரை மின் தடை அமலில் இருக்கும் என சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தன. ஆனால் அதில் குறிபிட்டப்படி 5மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் நோயாளிகள், சிறார்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணி என கூறி மின் தடை செய்யும் மின்வாரியம் சொன்ன கால அளவிற்குள் மீண்டும் மின் விநியோகத்தை துவங்காமல் காலம் தாழ்த்துவது தொடர் கதையாகி வருகிறது. திட்டமிடல், வேலை வாங்குதல் உள்ளிட்டவற்றில் இருக்கும் திறன் குறைபாடே இந்த அவலநிலைக்கு காரணம் என விவரம் அறிந்தவர்கள் குமுறுகின்றனர். இந்த விவகாரத்தில் மின் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்த மாதமும் இதேநிலை தொடராமல் இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...