Sunday, May 19, 2024

பழஞ்சூர் செல்வத்தின் இல்லத்திற்கு அரசு தலைமை கொறடா வருகை!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பழஞ்சூரை சேர்ந்தவர் கு.செல்வம். ஆளுங்கட்சியான திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில வர்த்தக அணி துணை தலைவராக இருந்து வருகிறார். இவரது மகளின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிலையில் பழஞ்சூரில் உள்ள செல்வத்தின் வீட்டிற்கு இன்று தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர். கோவி. செழியன் எம்.எல்.ஏ வருகைதந்தார். இந்த சந்திப்பின்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம், பழஞ்சூர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், அதிரை இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் சாகுல் ஹமீது, வழக்கறிஞர் விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....