Saturday, September 13, 2025

தமிழக அரசு நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன் கூட்டியே வழங்க வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர், மொளானா முகம்மது காஷிம் அறிக்கை.

அதிராம்பட்டினம். பிப் 25 இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.ரமலான் காலங்களில் இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பிருந்து கடைபிடிக்கும் இத்தருணத்தில், தமிழக அரசு சார்பில்.ஆண்டுதோறும் நோன்பு கஞ்சிக்கான அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது

கடந்த காலங்களில் நோன்பு க்ஞ்சிக்கான அரிசியை வழங்கியதில் சில குளறுபடிகள் இருந்து வருகிறது.குறிப்பாக உணவு கிடங்கில் இருந்து அரிசியை பள்ளிவாசலின் நிர்வாகமே தனியாக வாகனங்களில், கொண்டுவரும் சூழல் உள்ளது இது பள்ளியின் நிர்வாகத்திற்கு கூடுதல் சுமையாக உள்ளது, அரிசியை இலவசமக வழங்கு அரசே அதனை நேரடியாக விநியோகம் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

.மேலும், நோன்பு காலம் நெருங்கும் நேரத்தில், அரிசியை காலதாமதமின்றி வழங்கிட தமிழக அரசு ஆனை பிறப்பிக்க வேண்டும் என அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் மொளலவி காஷிம் ரஹ்மானி தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.





spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img