தமிழகம் முழுவதும் இன்று (03/03/24) ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளின் வளமான வாழ்விற்கு இரு துளி போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் கிரசெண்ட் பிளட் டோனார்ஸ் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.