Tuesday, May 14, 2024

ஏப்ரல் 19, 26 தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

Share post:

Date:

- Advertisement -

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வரும் ஏப்ரல் 19, 26 ஆகிய தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகள் முஸ்லிம்கள் மஸ்ஜித்களில் கட்டாய கூட்டு பிரார்த்தனை செய்யும் ஜும்ஆ நாளான வெள்ளிக்கிழமையாகும். இதனால் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பூத் ஏஜெண்ட் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களின் பணியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

ஆகவே, ஒரு தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பு என்பதால், அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் வாக்குகளை செலுத்தும் வகையில் முதல் கட்ட (ஏப்ரல் 19) மற்றும் இரண்டாம் கட்ட (ஏப்ரல் 26) தேர்தல் தேதிகளை மாற்றி அமைக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...