Thursday, May 16, 2024

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

Share post:

Date:

- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இன்று அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று பிறை தென்படாததால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்று 30வது நோன்பு பூர்த்தி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று மாலை ஷவ்வால் 1ம் பிறை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்பட்டது. அதனடிப்படையில் நாளை அதிரை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு, ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை எக்ஸ்பிரஸ் குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...