Wednesday, March 18, 2026

அதிரை இமாம் மரணத்தில் களங்கம் – களத்தில் இறங்கும் உலமா சபை – முதல்வரை சந்திக்க திட்டம்.?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளியில் இமாமாக பணியாற்றியவர் நாசர் இவர் கடந்த 05-2-2022 (ரமலான் மாதம்) அன்று தங்கையின் பிள்ளைபேறுக்காக பட்டுக்கோட்டை சென்று விட்டு திரும்பும் வழியில் முதல் சேரி சர்ச் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துறையினர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தார்.

பின்னர் உடலை உறவினர்கள், ஜமாத்தார்கள் முன்னிலையில் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் மறைந்த இமாமின் உடற்கூறு ஆய்வு அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது, அதில் மறைந்த இமாம் மது போதையில் விழுந்து மரணித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மிகவும் ஏழ்மையான பின்புலம் கொண்ட இமாமின் குடும்பத்தினர் இது குறித்து பலரிடமும் முறையிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு பத்திரிக்கையாளர் முன்னின்று இந்தனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதன் பின் மனித நேய ஜன நாயக கட்சி மாநில தலைவர் தமீமுன் அன்சாரி ஆலோசனை பேரில் நகர மஜக இவ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

இதனிடையே அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் முக நூல் பக்கத்தில் வெளிடயிடப்பட்ட இந்த செய்தி காட்டு தீ போல பரவ ஆரம்பித்தன.

இது குறித்து மாநில ஜமாத்துல் உலமா சபையினர் இவ்விவகாரத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மனு அளிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img