Saturday, December 13, 2025

நாளை முதல் தமிழகம் முழுவதும் மின்சாரம் விநியோகம் கிடையாதா..?

spot_imgspot_imgspot_imgspot_img

இரு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததால், தமிழக மின் வாரிய ஊழியர்கள் நாலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2015 டிசம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதற்காக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் வாரிய அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. நிலுவைத்தொகை இல்லாமல் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் முடிவு செய்தது. ஆனால், ஊழியர்கள் அதை ஏற்கவில்லை..

இந்நிலையில், இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால், நாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் மின் வினியோக பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மின்வாரிய இயக்குனர்கள் நேற்று மாலை முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டால் வேலை நிறுத்தம் கைவிடப்படும் எனத் தெரிகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img