Home » பாப்புலர் ஃபிரண்ட்டிற்கு நன்றி”- ஹாதியா

பாப்புலர் ஃபிரண்ட்டிற்கு நன்றி”- ஹாதியா

by admin
0 comment

‘நாங்கள் சேர்ந்து வாழ்வதற்கு நடத்திய சட்டப் போராட்டத்திற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்புலர் ஃபிரண்டிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஹாதியாவும் அவருடைய கணவர் ஷபீன் ஜஹானும் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினர்.

பிஎஃப்ஐ தலைவர் இ. அபூபக்கர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இருவரும் பிறகு செய்தியாளர்களிடம் பேசினர்.

“நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் எனும் கோரிக்கையுடன் பல முஸ்லிம் அமைப்புகளையும் அணுகினேன். ஆனால் யாரும் எனக்கு உதவவில்லை. பாப்புலர் ஃபிரண்ட்தான் எனக்கு உதவியது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஹாதியா

“உரிய வயதை அடைந்துள்ள எங்களுக்கு சுயமாகத் தீர்மானிக்க உரிமை உண்டு. மற்ற அமைப்புகளும் ஆதரவு அளித்தன என்றாலும் சட்டரீதியாக உரிமையைப் பெறும் போராட்டத்தில் எங்களுடன் நின்று உதவியது பிஎஃப்ஐதான்” என்றார் ஷபீன் ஜஹான்.

இனியாவது இறையருளால் உங்கள் இல்லற வாழ்வில் இன்பமும் மகிழ்ச்சியும் நிறையட்டும் சகோதரி.
-சிராஜுல்ஹஸன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter