அதிரையில் உள்ள பெரும்பாலான பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் நாளுக்கு நாள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
மாணவர்கள் இந்த போதைப் பொருளை உயயோக்கிப்பதை தடுக்கும் முயற்ச்சியாக இன்று ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு சார்பாக அலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு, சசங்கத்தலைவர் ஹாஜி MSM.அபூபக்கர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அண்மை காலமாக அதிரை இளைஞர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் சமூகம் சீர்கெட்டு வருவதையும் உடல்நலக்கேடுகள் ஏற்படுவதையும் பற்றி விவாதிக்கப்பட்டன.
மேலும், அதிரையில் போதை தடுப்பு குறித்து இளைஞர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் பேசப்பட்டது.
இதனையடுத்து இதுதொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் (28-09-2018) வெள்ளிக்கிழமை மாலை கடற்கரைத்தெரு ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.