தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த நவம்பர் மாத முதல் வாரத்தில் ஆண்களுக்கான ஆண்டு விளையாட்டு விழா நடைபெறுவதாக இருந்தது.
திடீரென்று வானிலை மாறி மழை பெய்ய தொடங்கியதால், அன்றைய தினன் விளையாட்டு விழாவை நடத்த இயலவில்லை.
அடுத்து வந்த கஜா புயலும் அதிராம்பட்டினம் பகுதியை கோர தாண்டவத்திற்கு ஆளாக்கியது.
இதன் காரணத்தால் பள்ளிக்,கல்லூரிகள் வெகுநாட்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த மாதம் அனைத்துப் பள்ளிக் கல்லூரிகளும் கஜா தாண்டவத்திற்குப் பிறகு செயல்படத் துவங்கியது.
இதனையடுத்து, இமாம் ஷாஃபி பள்ளியின் ஆண்கள் பகுதிக்கான விளையாட்டு விழா நாளை (08-01-2018) செவ்வாய்க்கிழமை மதியம் சரியாக 2.30 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை இமாம் ஷாஃபி ஆண்கள் பள்ளி வாளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டு விழாவில் ‘பெற்றோர்கள்’ மட்டும் கலந்துகொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.