Home » எல்லையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அஞ்சலி….!

எல்லையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அஞ்சலி….!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் இன்று(பிப் 17) கொண்டாடப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க நாளான பிப்ரவரி 17 அன்று தேசம் முழுவதும் அவ்வமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஏரியா சார்பில் கொடியேற்றி அண்மையில் தேசத்திற்காக உயிர்நீத்த 42 இராணுவ அதிகாரிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு முஸம்மில் தலைமை தாங்கினார்.மல்லிப்பட்டிணம் ஏரியா தலைவர் அஸ்கர் அகமது பாப்புலர் ஃப்ரண்ட் கொடியினை ஏற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் MTK.பசீர் அகமது,மல்லிப்பட்டிணம் ஜமாஅத் பொருளார் சேக் ஜலால் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.மேலும் SDPI கட்சியின் நகரத் தலைவர் அப்துல் பஹத்,நகர துணைத் தலைவர் ரஃபீக்,நகரச் செயலாளர் ஜவாஹீர்,அப்துர் ரஹ்மான் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter