அமமுகவிற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் அமமுக தொழினுட்ப பிரிவு இணைச் செயலாளர் முஹம்மது ஜாவித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த புரட்சிதலைவி அம்மா அவர்கள் இட்டுச்சென்ற பணிகளை சின்னமாவின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் செல்வர் TTV தினகரன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அரசு அம்மாவின் கொள்கைக்கு மாற்றமாக பாஷிச பாஜகவின் அடிவருடியாக செயல்படுவதை நன்கறிவோம். அம்மாவின் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட இவர்களின் கொள்கை பிடிப்பு எவ்வாறு உள்ளது என மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். இளைஞர்கள் போராட்டத்தால்தான் பாரம்பரியமிக்க ஜல்லிகட்டு மீட்கப்பட்டது. அதே ஒரு புரட்சி போராட்டத்தை உங்களின் ஒரே ஒரு வாக்கு மூலம் அம்மாவுக்கு துரோகமிழைத்த அதிமுக,பாஜகவின் கொள்கையற்ற கூட்டனியை முறியடிக்க அமமுக கூட்டனி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என ஜாவித் இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு!
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...





