Friday, February 6, 2026

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து… அதிரை உள்ளிட்ட ஊர்களில் பல மணிநேரமாக மின் தடை…!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் வாடியக்காடு பகுதியில் 110 KV கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்கள் மின்சாரம் பெறுகின்றன.

இந்நிலையில் இன்று(15/04/2019) இரவு 8 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதனை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இதனால் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மின் விநியோகம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

ஆனால் இந்த மின்தடையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img