Sunday, February 1, 2026

விதிகளை மீறி பேசும் மோடி, அமித் ஷா… நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு…!

spot_imgspot_imgspot_imgspot_img

தேர்தல் பிரச்சாரங்களின் போது விதிகளை மீறி பேசி வரும் பிரதமர் மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்ற்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மிதா தேவ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் பிரச்சார கூட்டங்களில் பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மோடி மற்றும் அமித்ஷா இருவரும் தேர்தல் பிரச்சாரங்களின் போது, பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும் இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பல முறை புகார் கூறியும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ராணுவ நடவடிக்கை பற்றி பேச கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் தடை உள்ள போதும், மோடி மற்றும் அமித்ஷா இருவரும் தங்களது பிரச்சார கூட்டங்களில் வாக்காளர்களை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களது அரசியல் சாதனையை போலவே இருவரும் பேசி வாக்கு கேட்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே மோடி மற்றும் அமித்ஷா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் சுஷ்மிதா தேவ் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சுஷ்மிதா தேவின் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரும் வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img